பௌத்த பிக்குவான சீலரதன தேரர் ஆர்ப்பாட்டக்காரர்களால் விரட்டியடிக்கப்பட்டார் (வீடியோ)

பௌத்த மத குருவும் , ராஜபக்ச ஆதரவாளருமான ஜனசெத முன்னணியின் தலைவர் வண.பத்தரமுல்லை சீலரதன தேரர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் குழுமியிருந்த இடத்துக்கு வந்து அவர்களோடு இணைந்து நின்று கொண்டு , ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க முற்பட்ட போது கூட்டத்தினரிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது.

பத்தரமுல்லை வண.சீலரத்ன தேரரை கெட்ட வார்த்தைகளால் திட்டியும் , விழுந்து கும்பிடுகிறோம் என சொல்லியும் , இந்த இடத்தை விட்டு வெளியேறுங்கள் என ஆர்ப்பாட்டக்காரர்கள் அறிவுறுத்தினர்.

நீங்கள் எல்லோரும் சேர்ந்துதான் இந்த ஆட்சியை கொண்டு வந்தீர்கள். எனவே இது போல இனி வராதீர்கள் என கடும் வார்த்தை பிரயோகங்களால் துரத்தியடித்தனர்.

இறுதியில் பத்தரமுல்லைச் சேர்ந்த வண.சீலரத்ன தேரர் மக்களின் பலத்த எதிர்ப்பை எதிர்கொண்டு அந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டி வந்தது.

இது தொடர்பான நிகழ்வின் காட்சிகள் கீழே….

Leave A Reply

Your email address will not be published.