கொலம்பியாவை மூழ்கடித்த கனமழை – பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு.

கொலம்பிய நாட்டில் கனமழையில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிகை 13 ஆக அதிகரித்துள்ளது.

ஆண்டியோக்வியா மாகாணம் கனமழையால் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. அங்குள்ள சுரங்க முகாமை வெள்ளமும் நிலச்சரிவும் சூழ்ந்தன. 13 பேர் இதுவரை உயிரிழந்த நிலையில், மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த வருடம் மட்டும் ஆண்டியோக்வியா மாகாணத்தில் மழை பாதிப்பால் 100க்கும் அதிகமானோர் பலியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.