உக்ரைனுக்கு ராணுவ வாகனங்கள், ஏவுகணைகளை வழங்க இங்கிலாந்து முடிவு.

உக்ரைன் மீது ரஷியா 46-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர பல நாடுகள் முயற்சித்த போதும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன. உக்ரைன் தலைநகர் கீவ், மரியப்போல், கார்கீவ், கார்சன் உள்பட பல்வேறு நகங்களில் ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

ரஷிய படைகளின் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. மேலும், ரஷியாவின் கட்டுப்பாட்டில் இருந்த சில பகுதிகளை உக்ரைன் படைகள் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளன.

இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ராணுவ ஆயுதங்கள், தளவாடங்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது.

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்டார். அவர் உக்ரைன் பிரதமர் ஜெலன்ஸ்கியை தலைநகர் கீவ்வில் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின் போது, ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு ராணுவ வாகனங்கள், போர் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை வழங்க இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் சம்மதம் தெரிவித்துள்ளார். விரைவில் ராணுவ ஆயுதங்கள் இங்கிலாந்தில் இருந்து உக்ரைனுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.