சிவகார்த்திகேயனின் 2 படங்களை வாங்கிய பிரபல நிறுவனங்கள்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் சிவகார்த்திகேயன்.

இவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘டான்’ படம் மே மாதம் 13ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழ் & தெலுங்கில் உருவாகும் தன் 20வது படத்தில் நடித்து வருகிறார் சிவா.

இதன் படப்பிடிப்பு புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் நடைபெற்றது. அப்போது புதுவை முதல்வர் ரங்கசாமியை சந்தித்தார் சிவகார்த்திகேயன்.

இந்த நிலையில் லைகா உடன் இணைந்து சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்த ‘டான்’ படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தமிழக விநியோக உரிமையை வாங்கியது.

இதனையடுத்து சிவகார்த்திகேயனின் 20வது படத்தை மதுரை அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது.

இந்த இரண்டு படங்களுக்குமே பெரிய விலை கொடுக்கப்பட்டு உள்ளதாம்.

SK20வது படத்தின் சூட்டிங் இன்னும் பாதி கூட முடிவடையாத நிலையில் நல்ல விலைக்கு விற்கப்பட்டுள்ளதை கோலிவுட்டே ஆச்சர்யத்துடன் பார்க்கிறது.

Leave A Reply

Your email address will not be published.