முதன் முறையாக வெளியான அல்லு அர்ஜுன் “புஷ்பா 2” லுக்.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மற்றும் பலர் நடிக்க டந்த வருடக் கடைசியில் வெளிவந்த படம் ‘புஷ்பா’. இப்படம் உலக அளவில் சுமார் 350 கோடி வசூலித்து பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. தமிழகத்தில் 25 கோடிக்கும் மேல் வசூலித்தது.

அதே சமயம், ஹிந்தியில் நேரடிப் படங்களுடன் போட்டி போட்டு 100 கோடிக்கும் மேல் வசூலித்தது.இரண்டு பாகங்களாகத் திட்டமிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் இரண்டாம் பாகப் படப்பிடிப்பு கடந்த மாதமே ஆரம்பமாகும் என்றார்கள். ஆனால், சில பல காரணங்களால் படப்பிடிப்பு தள்பிப் போய் வருகிறது. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என படத்தின் இயக்குனர் சுகுமார், நாயகன் அல்லு அர்ஜுன் பேசி வருகின்றனராம்.

ஹிந்தி ரசிகர்களையும் கவரும் விதத்தில் கூடுதலாக ஏதாவது செய்ய திட்டமிட்டுள்ளார்களாம்.இதனிடையே, இரண்டாம் பாகத்திற்காக இயக்குனர் சுகுமாருக்கும், நடிகர் அல்லு அர்ஜுனுக்கும் கூடுதலாக சம்பளம் தர தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாம்.

இயக்குனருக்கு 50 கோடி வரை சம்பளம், அல்லு அர்ஜுனுக்கு ஹிந்தி உரிமை என பேசி முடித்துள்ளார்களாம். இது அவர்கள் வழக்கமாக வாங்கும் சம்பளத்தை விட மூன்று மடங்கு அதிகம் என்கிறார்கள். படத்தின் நாயகி ராஷ்மிகாவுக்கும் இரு மடங்கு சம்பளம் என்று சொல்லிவிட்டார்களாம்.

புஷ்பா தி ரூல் படத்தில் மங்களம் சீனுவுக்கு பதிலாக புஷ்பா நடத்தும் அந்த பிரம்மாண்ட பார்ட்டி நிகழ்ச்சியில் மீண்டும் ஒரு குத்தாட்ட பாடலுக்கு நடிகை சமந்தாவையே ஆட வைக்க திட்டமிட்டுள்ளாராம் இயக்குநர் சுகுமார்.

ஓ சொல்றியா மாமா மற்றும் புஷ்பா 2 படத்தில் வரும் குத்தாட்ட பாடல் என இரண்டுக்குமே சேர்த்து நடிகை சமந்தாவுக்கு 5 கோடி ரூபாய் வழங்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.இந்நிலையில் படத்தின் இரண்டாவது பாகத்திற்கான பணிகள் துவங்கியுள்ளன. இந்தப் படத்திற்கான ரிலீசை ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

இந்நிலையில் அல்லு அர்ஜூனின் பிறந்தநாளையொட்டி அவரது புதிய கெட்டப்பை படக்குழு வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படம் புஷ்பா 2 படத்தில் அவரது புதிய லுக் என்று கூறப்படுகிறது. இந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.