காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மகிந்த அழைப்பு

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து இளைஞர் சமூகத்துடன் கலந்துரையாட அரசாங்கம் தயாராக இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

காலிமுகத்திடலில் இடம் பெறும் கோட்டா வீட்டுக்கு போ போராட்டம் 5வது நாளாக நடைபெற்று வரும் நிலையில் பிரதமர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

மக்கள் போராட்டம் தொடங்கி 5 நாட்கள் ஆகிறது.

அந்த இடம் ‘கோட்டாகோகம’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டு நூலகங்கள், கழிவறைகள், இரவு கூடாரங்கள், மொபைல் போன் சார்ஜ் செய்யும் நிலையங்கள் உள்ளிட்ட பல வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.