பாலின் விலையை 10 ரூபாவால் அதிகரிக்க தீர்மானம்.

எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஒரு லீற்றர் பசுப்பாலின் விலை 10 ரூபாவால் அதிகரிக்க யாழ் மாவட்ட அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கம் (யாழ்கோ) தீர்மானித்துள்ளது.

கால்நடைத் தீவன விலை மற்றும் பராமரிப்புச் செலவுகளில் ஏற்பட்ட அதிகரிப்பினால் பால் உற்பத்தி செலவுக்கு ஏற்படும் செலவினை ஈடுசெய்யமுடியாமல் சிரமப்படும் அங்கத்துவப் பண்ணையாளர்களினைப் பாதுகாக்கும் முகமாக இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விலையதிகரிப்பின் பிரகாரம் எதிர்வரும் முதலாம் திகதி ஒரு லீற்றர் பசுப்பால் 140 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது.

பண்ணையாளர்களிடமிருந்து ஒரு லீற்றர் பால் 121 ரூபாவுக்கு கொள்வனவு செய்வதற்கும் யாழ் மாவட்ட அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தின் இயக்குநர் சபை முடிவெடுத்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.