மஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை! புதன்கிழமை சபாநாயகரிடம் ஒப்படைக்க முயற்சி!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உடனடியாக பதவி விலகாவிட்டால் இன்று நம்பிக்கையில்லா பிரேரணையில் கைச்சாத்திட அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, ஆளும் கட்சியில் இருந்து எதிர்க்கட்சியில் அமரவுள்ள 39 பேர் கொண்ட குழுவும், தற்போது அரசாங்கத்தில் சுயேச்சையாக உள்ள டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட பல உறுப்பினர்களும் நாளை கையொப்பமிட இணக்கம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது எதிர்வரும் புதன்கிழமை சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.