எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் வெடி விபத்து – 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.

தீவிபத்து ஏற்பட்ட சுத்திகரிப்பு நிலையத்தின் உரிமையாளரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

நைஜீரியாவில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு எதிர்பாராத விதமாக பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ அங்குள்ள எண்ணெய் கிடங்குகளில் வரை வேகமாக பரவியதால், பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.

இந்த வெடி விபத்தில் அங்கு சட்டவிரோதமாக எண்ணெய் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டவர்கள் பலர் உயிரிழந்ததாக காவல்துறை செய்தி தொடர்பாளர் மைக்கேல் அபாட்டம் தெரிவித்துள்ளார். மேலும் தீவிபத்து ஏற்பட்ட சுத்திகரிப்பு நிலையத்தின் உரிமையாளரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த விபத்து சம்பவத்தில் இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.