படுகொலையான, தாக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் கட்-அவுட்களை அகற்றிய பொலிஸார்… (புகைப்படங்கள் / வீடியோ)

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அலுவலகத்தின் வேலிக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த படுகொலை செய்யப்பட்ட மற்றும் தாக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் பதாகைகளை போலீசார் கழட்டி வீசியுள்ளனர்.

ஆர்ப்பாட்ட பூமியில் படுகொலை செய்யப்பட்ட, காணாமல் போன மற்றும் தாக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் புகைப்படங்களைக் காட்சிப்படுத்தும் பல பதாகைகள் மற்றும் அவர்களுக்கு நீதி கோரி காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

காணாமல் போன ஊடகவியலாளர்களான மயில்வணகம் நிமலராஜன், லசந்த விக்கிரமதுங்க மற்றும் தர்மரட்ணம் சிவராம் மற்றும் காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட மற்றும் தாக்கப்பட்ட கீத் நொயார் மற்றும் பொத்தல ஜயந்த ஆகியோரது புகைப்படங்கள் அடங்கிய சுவரொட்டிகள் அகற்றப்பட்டு ஜனாதிபதி செயலக வளாகத்துக்குள் வீசப்பட்டுள்ளன.

இதனை சாதாரண உடையில் வந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.