சோமாலியாவில் கண்ணிவெடி தாக்குதல்; 10 வீரர்கள் உயிரிழப்பு.

சோமாலியாவின் தெற்கே ஷாபெல் பகுதியில் ஜவுகர் மாவட்டத்தில் இருந்து பலாட் மாவட்டத்திற்கு ராணுவ வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தபோது, கண்ணிவெடி ஒன்று வெடிக்க செய்யப்பட்டு உள்ளது.

இந்த தாக்குதலில், வாகனத்தில் இருந்த 10 வீரர்கள் கொல்லப்பட்டனர். அல்-ஷபாப் என்ற, ரஷியாவில் தடை செய்யப்பட்ட அல்-கொய்தா பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய இயக்கம் இந்த தாக்குதலை நடத்தி உள்ளது.

சோமாலியாவில் ஊடுருவி அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் அந்த இயக்கத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். ஐ.நா.வின் மனிதநேயம் சார்ந்த நடவடிக்கைகளுக்கு தடங்கல் ஏற்படுத்தும் வகையிலும் அவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.