நாட்டிலுள்ள அனைத்து மதுபான சாலைகளையும் மறு அறிவித்தல் வரை மூட தீர்மானம்.

நாட்டிலுள்ள அனைத்து மதுபான சாலைகளையும் மூடுவதற்கு தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

மறு அறிவித்தல் வரை இந்த தீர்மானம் நடைமுறையில் இருக்குமென மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டில் குறிப்பாக கொழும்பில் இன்று காலை முதல் பதற்ற நிலை நிலவி வருகிறது.

இந்த நிலையில் நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டள்ளது.

இதனையடுத்தே நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான சாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று முதல் ஊரடங்கு அமுலில் உள்ள காலப்பகுதியினுள் மதுபானசாலைகள் திறக்கப்படமாட்டாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.