சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது தாக்குதல் (Video)

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அலரிமாளிகைக்கு முன்பாக மூத்த டிஐஜி தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சிறு காயங்களுடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சற்று முன்னர் பெரஹெர மாவத்தையில் வைத்து பிரதி பொலிஸ் மா அதிபர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உடனடியாக ராணுவத்தினர் நடவடிக்கை எடுத்து வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு டிஐஜியை மீட்டு போலீஸ் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

நேற்று (09) காலி முகத்திடலில் இடம்பெற்ற தாக்குதலில் ஈடுபட்டவர்களை பாதுகாத்து , தாக்குதலுக்கு இடமளித்தாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது புகார்கள் வந்தன. அத்துடன் அவர்களோடு அவரும் கலந்துகொண்டு தாக்குதலை நெறிப்படுத்தினார் என தென்னகோன் மீது பலர் குற்றம் சாட்டியிருந்தனர்.

தேசபந்து தென்னகோனை துரத்தி தாக்கும் வீடியோ

Leave A Reply

Your email address will not be published.