இலங்கை அரசியல் தலைவர்களுக்கு பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் விடுத்துள்ள வேண்டுகோள்!

இலங்கை மக்களின் கோரிக்கைகளுக்கு, அரசியல் தலைவர்கள் செவிசாய்க்க வேண்டும் என, பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

‘சமீபத்திய காலங்களில், நாட்டின் சமூக மற்றும் பொருளாதார சவால்கள் மற்றும் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து, தங்கள் அழுகையை ஒலிக்கும் இளைஞர்களுக்கு’ எனது வாழ்த்துக்களை அனுப்புகின்றேன்.

‘வன்முறைக்கு அடிபணியாமல், அமைதியான அணுகுமுறையைப் பேணுமாறு, அனைத்துத் தரப்பினரையும் வலியுறுத்துவதில், நான் மத அதிகாரிகளுடன் இணைந்து கொள்கிறேன்.’

எதிர்ப்பாளர்களின் குரல்களுக்கு செவிசாய்க்குமாறு, இலங்கையின் ஆளும் அரசியல் தலைவர்களுக்கும், அழைப்பு விடுக்கின்றேன்.

‘மக்களின் அபிலாஷைகளுக்கு செவிசாய்க்கவும், மனித உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகளுக்கு, முழு மரியாதையை உறுதிப்படுத்தவும், பொறுப்புகள் உள்ள அனைவரையும் நான் கேட்டுக் கொள்கிறேன்.’ என பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.