பேக்கரி தொழிலை தொடர்ந்தும் நடத்திச் செல்ல முடியாத நிலை.

கோதுமை மாவின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளமை காரணமாக வெதுப்பக தொழிலை தொடர்ந்தும் நடத்திச் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி ,நேற்று நள்ளிரவு முதல் ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 35 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், வெதுப்பகங்களில் தயாரிக்கப்படும் பாண் உட்பட சிற்றுண்டிகளின் விலைகள் மேலும் அதிகரிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ,சமையல் எரிவாயு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு தமது தொழிற்துறையின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளது எனவும் ஜெயவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.