பாரளுமன்றத்தில் பகலுணவு இடைநிறுத்தம்.

பாராளுமன்றில் வழங்கப்படும் பகலுணவை இடை நிறுத்துமாறு ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த கோரிக்கை செயற்படுத்தப்படும் எனவும் ஏனைய உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பகலுணவு குறித்து கட்சி தலைவர் கூட்டத்தில் விசேட அவதானம் செலுத்தப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபையில் தெரிவித்துள்ளார்.

மேலும் ,ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு பாராளுமன்றினால் வழங்கப்படும் பகலுணவை இடைநிறுத்துமாறு விடுத்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு அக்கோரிக்கை செயற்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.