ஐக்கிய மக்கள் சக்திக்குள் உட்கட்சி மோதல் உக்கிரம்! சஜித் மீது பலரும் அதிருப்தி.

சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்குள் உட்கட்சி மோதல் உக்கிரமடைய ஆரம்பித்துள்ளது எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரதமர் பதவியை சஜித் பிரேமதாஸ ஏற்காததால் அதிருப்தியடைந்த ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார ஆகியோர் கட்சியிலிருந்து விலகி, அரசுடன் இணைந்து அமைச்சுப் பதவியை ஏற்றுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சி ஊடாக, எதிர்கால அரசியல் பயணத்தைத் தொடரவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

கரு ஜயசூரியவை தேசியப்பட்டியல் எம்.பியாக்கி, அவருக்குப் பிரதமர் பதவியை வழங்கலாம் என கபீர் ஹாசீம் உள்ளிட்ட சில உறுப்பினர்கள் யோசனை முன்வைத்துள்ளனர். இதற்காக தனது தேசியப்பட்டியல் எம்.பி. பதவியை விட்டுக்கொடுக்க மயந்த திஸாநாயக்க தயாராகவே இருந்துள்ளார். இந்த முயற்சி வெற்றியளிக்காததால் கபீர் ஹாசீம் உள்ளிட்ட தரப்பும் மனமுடைந்த நிலையிலேயே காணப்படுகின்றது.

சரத் பொன்சேகா, ராஜித சேனாரத்ன போன்றவர்கள் சஜித்தை தவறாக வழிநடத்துகின்றனர் என மேலும் சில உறுப்பினர்கள், தமது சகாக்களிடம் உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.