’21’திருத்தச் சட்டமூலம் தொடர்பில் ஆளுங்கட்சியினருக்குள் முரண்பாடு; கோட்டாபய நாளை முக்கிய சந்திப்பு!

அரசமைப்பின் உத்தேச 21ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் நாளையும் முக்கிய சந்திப்பு நடைபெறவுள்ளது.

இதன்படி ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நாளை மாலை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

21 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் மொட்டுக் கட்சிக்குள் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இரட்டைக் குடியுரிமை உடையவர்கள் நாடாளுமன்றம் வருவதைத் தடுக்கும் ஏற்பாட்டை மொட்டுக் கட்சியின் நிறுவுநரான பஸில் ராஜபக்சவின் சகாக்கள் எதிர்க்கின்றனர்.

இந்நிலையிலேயே ஆளுங்கட்சிக்குள் ஒருமித்த நிலைப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.