2,476 லீற்றர் எரிபொருளுடன் மூவர் வசமாக சிக்கினார்கள்!

சட்டவிரோதமாக 2 ஆயிரத்து 476 லீற்றர் எரிபொருளை சேமித்து வைத்திருந்த மூவர் யாழ்ப்பாணம் மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து சுமார் 500 லீற்றர் டீசல், 306 லீற்றர் பெற்றோல் மற்றும் 1,670 லீற்றர் மண்ணெண்ணெய் என்பன மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மயிலங்காடு, சுன்னாகம் மற்றும் பொல்கஹவெல ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைதாகியுள்ளனர்.

இதேவேளை, சட்டவிரோதமாக எரிபொருள் சேமிப்பில் ஈடுபடுபவர்களைக் கண்காணிப்பதற்காகப் பொலிஸார் தொடர்ந்தும் சுற்றிவளைப்புகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.