தோல்வியடைந்த ஐ.தே.க உறுப்பினர்களுக்கு மாகாண சபையில் வெற்றி பெற்று காட்டுமாறு நளின் பண்டார சவால்

பொது தேர்தலில் தோல்வியடைந்த ஐதேக உறுப்பினர்கள் முடியுமாக இருந்தால் மாகாண சபையில் போட்டியிட்டு வெற்றி பெற்று காட்டுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார சவால் விடுத்துள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே ஐக்கிய தேசிய கட்சிக்கு அவர் இவ்வாறு சவால் விடுத்துள்ளார்.

அகில விராஜ் காரியவசம் உள்ளிட்டோர் முடியுமாகயிருந்தால் மாகாண சபைத்தேர்தலில் போட்டியிட்டு மாகாண சபை உறுப்பினராகக்கூட ஆக முடியாத நிலை உருவாகி உள்ளதாக நளின் பண்டார இதன் போது சுட்டிக்காட்டினார்.

அத்துடன் ஐக்கிய தேசிய கட்சியினரை மக்கள் நகர சபைக்கு கூட அனுப்ப தயாரில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்ததற்கான முழு பொறுப்பையும் ஐக்க்pய தேசியக்கட்சியே ஏற்க வேண்டுனெமவும் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கூறியுள்ளார்.

Comments are closed.