ஓட்டு போட்டால் மசால் தோசை இலவசம்!!! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட கர்நாடகா ஹோட்டல்

அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில் நாளை வட கர்நாடகா எனப்படும் தக்ஷினகண்டாவில், வாக்குப்பதிவு நடைபெறுவதால் வாக்கு செலுத்துபவர்களுக்கு உணவு இலவசம் என்று பிரபல ஹோட்டல் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த ஓட்டல் நிறுவனம் மற்றும் வேறு சில நிறுவனங்களும் ஓட்டு போட வருவதற்கு சில இலவச அறிவிப்புகளை வெளியிட்டுள்ளதால் நாளை வாக்குப்பதிவு சதவீதம் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடக மாநிலத்தில் நாளை இரண்டாம் கட்டமாக 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்க உள்ளது. வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில் நிசர்கா கிராண்ட் என்ற ஹோட்டல் நிறுவனம் வாக்கு செலுத்தி விட்டு விரலில் உள்ள மையை காட்டினால் வெண்ணெய் தோசை, நெய் சோறு, குளிர்பானங்கள் இலவசம் என்று அறிவித்துள்ளது.

அடுத்தடுத்து பல நிறுவனங்கள் வாக்கு செலுத்துபவர்களுக்கு இலவச அறிவிப்புகளை வெளியிட்டுள்ளதை அடுத்து தக்ஷனகன்னடாவில் 80% மேல் வாக்குப்பதிவு நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

வாக்கு செலுத்தி விட்டு கையில் வாக்கு செலுத்திய மையை காண்பித்தால் போதும் இலவசமாக மசால் தோசையும் காப்பியும் சாப்பிடலாம்.

இதே போல அவர்கள் ஹோட்டல் நிர்வாகத்தில் பணியாற்றும் அனைவரும் தேர்தலுக்கு வாக்கு செலுத்துவதின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் விதத்தில் வாசகங்களை கொண்ட டி-ஷர்ட் கேப் அணிந்து வாடிக்கையாளர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை காலை 7.30 மணியிலிருந்து பகல் 12 மணி வரை மசால் தோசையும், காப்பியும் இலவசமாக கிடைக்க வேண்டுமென்றால் வாக்கு செலுத்துங்கள் என நிர்வாகத்தின் இயக்குநர் உதய் கடம்பா தெரிவித்தார். ஆனால் ஒரே கண்டிஷன்தான் அரசியல் அடையாளத்துடன் வரும் வாடிக்கையாளர்களுக்கு இலவசம் இல்லை என்று கூறிவிட்டார்.

மேலதிக செய்திகள்

இராவணன் மீண்டும் எழுவானா? – (உபுல் ஜோசப் பெர்னாண்டோ)

ஜனாதிபதித் தேர்தலில் அனைத்து வேட்பாளர்களையும் எதிர்கொள்ள நான் தயார்! – சஜித் சூளுரை.

யாழ். தெல்லிப்பழை பெண் மரணம்: தலைமறைவான மகன் இன்று கைது!

சாவகச்சேரி வைத்தியசாலையில் மேல்நிலை அதிகாரியைத் தாக்கிய தாதி கைது!

மஹரகம வடிகாலில் ஒரு தொகை கடவுச்சீட்டுகள்.

இந்தோ பசிபிக் பிராந்திய இயக்குனருக்கும் NPP தலைவருக்கும் இடையே சந்திப்பு!

போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட ஹமாஸ் : எகிப்து மற்றும் கத்தாரில் இருந்து போர் நிறுத்த முன்மொழிவு.

இந்த எதிர்ப்புக் கோசம் எந்த இலவசக் கல்வி பற்றியது ? – குசல் பெரேரா

ராஃபாவிலிருந்து பாலஸ்தீனர்களை வெளியேற்றும் இஸ்ரேல்.

சிங்கப்பூர், இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் கூட்டு கியூஆர் குறியீட்டுக் கட்டண முறையைத் தொடங்க ஜப்பான் இலக்கு.

சிறைபிடிக்கப்பட்ட இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான்.

தமிழகக் காவல்துறை இணையத்தளத்தை முடக்கிய இணைய ஊடுருவல்காரர்கள்.

சாதி வெறி தாக்குதலுக்கு உள்ளான மாணவன் +2 தேர்வில் சாதனை.

அல்ஜசீரா இஸ்ரேல் அலுவலகத்தில் சோதனை.

Leave A Reply

Your email address will not be published.