மண்ணெண்ணெய் வேண்டி மஸ்கெலியாவில் போராட்டம்.

மண்ணெண்ணெய் வழங்குமாறு கோரி மஸ்கெலியா எரிபொருள் நிலையத்துக்கு முன்பாக மஸ்கெலியா பிரதேச மக்கள் பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்துக்குக் கடந்த மூன்று கிழமையாக மண்ணெண்ணெய் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் இன்று மண்ணெண்ணெய் கிடைக்கும் என மக்கள் எதிர்பார்ப்புடன் வருகை தந்த நிலையில், இன்றும் மண்ணெண்ணெய் வரவில்லை என எரிபொருள் நிலைய ஊழியர்களால் தெரிவிக்கப்பட்டதையடுத்து, ஆவேசமடைந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மண்ணெண்ணெய் விநியோகம் செய்வதற்கு முறையான முறைமை ஏற்படுத்தக் கோரி இன்று காலை முதல் மண்ணெண்ணெய்க்காக வரிசையில் நின்ற சுமார் 500 இற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் காரணமாக போக்குவரத்தும் ஸ்தம்பிதமாகியிருந்தது. குறிப்பாக மஸ்கெலியா – ஹட்டன், மஸ்கெலியா – நல்லதண்ணி போன்ற பிரதான வீதியினூடான போக்குவரத்து பல மணி நேரம் ஸ்தம்பிதமாகியிருந்தது. இதனால் பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகியிருந்தனர்.

இதையடுத்து, நாளை அல்லது எதிர்வரும் நாட்களில் அணைவருக்கும் மண்ணெண்ணெய் கிடைக்கத் தாங்கள் ஏற்பாடுகளைத் செய்து தருவதாக எரிபொருள் நிலைய அதிகாரியால் தெரிவிக்கப்பட்டதையடுத்து, போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.