இனிமேல் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை.

நாட்டில் இனிமேல் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ,உட்புற மற்றும் வெளிப்புற இடங்களில் நாளை (10) முதல் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என சுகாதார அமைச்சு இன்று (9) அறிவித்துள்ளது.

கொரோனா தொற்றைத் தவிர்ப்பதற்கு இந்த பாதுகாப்பு உத்தியை பயன்படுத்த வேண்டியது கட்டாயமில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் அசேல குணார்தன தெரிவித்துள்ளார்.

மேலும் ,சுவாசக் கோளாறுகள் மற்றும் அது தொடர்பான நோய்கள் உள்ளவர்கள் சாதாரண முகமூடிகளை அணியலாம் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.