யாழில் கோர விபத்து; இருவர் பரிதாபப் பலி!

யாழ்ப்பாணம், அரியாலைப் பகுதியில் ரயிலுடன் வான் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் பலியாகியுள்ளனர்.

அரியாலை – மாம்பழம் சந்திக்கு அருகில் இன்றிரவு 7.15 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வானில் பயணித்தவர்களில் இருவரே உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.