கோழி இறைச்சி, முட்டை விலை மீண்டும் சடுதியாக அதிகரிப்பு!

கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளன என்று அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மக்காச்சோள தட்டுப்பாடு மற்றும் மூலப்பொருட்களைப் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிரமம் இந்த நிலைக்குக் காரணம் என்று சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

விலங்குத் தீனிக்காக வருடந்தாந்தம் 30 கோடி டொலர் தேவைப்படுகின்றது. இவ்வாறான நிலையில் மாதாந்தம் 3 கோடி டொலராவது விலங்கு உணவுக்காக வழங்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது சந்தையில் முட்டை ஒன்றின் விற்பனை விலை 50 ரூபாவை எட்டியுள்ளது.

மேலும், ஒரு கிலோ கோழி இறைச்சி 1,200 ரூபா தொடக்கம் 1,300 வரை விற்பனை செய்யப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.