கொழும்பு புகையிர நிலையத்தில் காணாமல் போயுள்ள இளைஞன்.

மாவத்தகம பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மெல்வத்த வேஉடப் பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய முஹமட் நஸ்லான் என்ற பெயருடைய இளைஞர் ஒருவர் 8- 06-2022 தினம் கொழும்பு புகையிர நிலையத்தில் வைத்து காணமற் போய் உள்ளார்.

கொழும்பில் பிட்டிங் தொழில் புரிவதற்காக சென்றிருந்த குறித்த இளைஞர் தம் நண்பர் சகிதம் ஊர் வருவதற்காக கொழும்பு புகையிர நிலையம் வரை வந்தவர் எனவும் இவருடைய நண்பர் இருவருக்குமான புகையிரதப் பயணப் பற்று சீட்டை பெற்றுக் கொண்டு வந்த பார்த்த தருணத்தில் ஆள் காணாமற் போய் உள்ளார் எனவும் கோட்டை பொலிஸில் முறைபாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் பற்றிய தகல்வகள் கிடைக்கமாயின் அவருடைய தந்தை எம். டி. சாலிஹீன் 0758005637 அல்லது அவருடைய உறவினர் ஏ.எம். முஜாஹிரின் 0772820820 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அறியத் தருமாறு குடும்பத்தினர்கள் வேண்டுகோள்விடுக்கின்றனர்.

(இக்பால் அலி)

Leave A Reply

Your email address will not be published.