குடியரசுத் தலைவர் தேர்தல் பணிக்காக மத்திய அமைச்சர் தலைமையில் பாஜகவில் 14 பேர் குழு அமைப்பு

குடியரசுத் தலைவர் தேர்தல் பணிகளை மேற்கொள்ள 14 பேர் கொண்ட மேலாண்மை குழுவை பாஜக அறிவித்துள்ளது. மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தலைமையிலான இக்குழுவில், தமிழகத்தை சேரந்த பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் இடம்பெற்றுள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தல்வரும் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வேட்புமனு தாக்கல் கடந்த 15-ம் தேதி தொடங்கி வரும் 29-ம் தேதி வரை நடக்க உள்ளது. எனவே, அனைத்து கட்சிகளின் ஒருமித்த கருத்துடன் வேட்பாளரை நிறுத்த பாஜக தீவிரமாக முயற்சித்து வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.