தமிழக அரசின் நிவாரணப் பொருட்களுடன் வந்தது இன்னுமொரு கப்பல்.

பொருளாதாரப் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்காகத் தமிழக அரசால் மேலும் நிவாரணப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

நிவாரணப் பொருட்கள் அடங்கிய கப்பல் இன்று காலை கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ள நிலையில், அவற்றில் உள்ள பொருட்கள் இந்தியத் தூதுவரால் இலங்கை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

குறித்த கப்பலில் 14 ஆயிரத்து 712 டொன் அரிசி, 250 டொன் பால்மா மற்றும் 38 டொன் அத்தியாவசிய உயிர் காக்கும் மருந்துகள் இருக்கின்றன என்று தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே தமிழக அரசின் முதல் கட்ட நிவாரணப் பொருட்கள் கடந்த மாதம் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.