இராணுவம் பதிவுகளை மேற்கொண்டமையால் அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று குழப்பம்.

யாழ்ப்பாணம், அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் விநியோகத்துக்கு என இராணுவத்தினர் பதிவுகளை மேற்கொண்டமையால் சிறிது நேரம் குழப்பம் ஏற்பட்டது.

குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காலை முதல் இராணுவத்தினர் மண்ணெண்ணெய் விநியோகத்துக்கு எனப் பதிவுகளை முன்னெடுத்தனர்.

அதனைக் கேள்வியுற்று பலர் பதிவுகளை மேற்கொள்ள முண்டியடித்தனர். அதன்போது எரிபொருள் நிரப்பு நிலையத்தினர், விவசாயிகளுக்கு விநியோகிக்கவே மண்ணெண்ணெய் உள்ளது எனவும், ஏனையோருக்கு வழங்க முடியாது எனவும் கூறினார்கள். அதனையும் பொருட்படுத்தாது இராணுவத்தினர் பதிவுகளை முன்னெடுத்தனர்.

இந்த விடயம் தொடர்பில் கோப்பாய் பிரதேச செயலருக்குத் தெரியப்படுத்தப்பட்டது.

அதையடுத்துப் பிரதேச செயலர், “மண்ணெண்ணெய் விவசாயிகளுக்கு மாத்திரமே பகிர்ந்தளிக்கவுள்ளோம். ஏனையோருக்கு விநியோகிக்க முடியாது” என்று இராணுவத்தினருக்குத் தெரிவித்ததை அடுத்து இராணுவத்தினர் பதிவு நடவடிக்கைகளை இடைநிறுத்தினர்.

Leave A Reply

Your email address will not be published.