குளத்தில் தவறி வீழ்ந்து குழந்தை பரிதாபச் சாவு – கண்டியில் துயரம்.

வீட்டுக்கு முன்னால் உள்ள குளத்தில் தவறி வீழ்ந்து மூன்று வயது ஆண் குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.

கண்டி மாவட்டம், பன்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடுகெலே காட்டின் மேல் பகுதியில் நேற்று மாலை இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை குளத்தில் தவறி வீழ்ந்துள்ளது.

சடலம் மடுல்லக்கலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பன்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.