மொறட்டுவையில் இருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை.

மொறட்டுவை – கட்டுபெத்த, பிலியந்தலை வீதியில் இன்று பகல் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

சிறிய ரக வேன் ஒன்றுக்குள் கொலை செய்யப்பட்ட இருவரின் சடலங்களும் உள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இருவரே கொலை செய்யப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட விதம் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் பதிவாகவில்லை.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.