கடந்த மாத கொலைகளில் 10 துபாய் மற்றும் இந்தியாவிலிருந்து திட்டமிடப்பட்டவை !

கடந்த மாத காலத்தில் நடந்த 12 கொலைகளில் 10 கொலைகள் துபாயில் உள்ள போதைப் பொருள் வியாபாரிகளால் திட்டமிடப்பட்டவை எனத் தெரிய வந்துள்ளன.

இந்தியாவில் இருந்து 2 கொலைகள் திட்டமிடப்பட்டு உள்ளது. பாணதுறை மற்றும் மொறட்டுவை கொலைகள் தூள் சலிந்து மூலமும் ,
கோட்டை, அஹங்கம, தங்கல்ல கொலைகள் ஹரக்கட்டா என்ற பாதாள ரவுடியாலும், களனி மற்றும் வத்தளை மற்றும் அலகண்த கொலைகள் , ஜா எல ஜூட் என்பவராலும் துபாயிலிருந்து திட்டம் தீட்டப்பட்டுள்ளன.

முகத்துவார கொலை பூக்குடிகன்னா என்பவனாலும் , பேலியகொடை மெனிங் வர்த்தக நிறுவன கொலை தனுக என்பவர் மூலம் இந்தியாவில் இருந்து திட்டமிடப்பட்டுள்ளன என விசாரணைகளின் பின் தெரிய வந்துள்ளன.

இந்தக் கூலி கொலைகளுக்காக , மாகிலங்கமு சஞ்சீவ என்பவன் கொலையாளிகளை வழங்கியமை தெரிய வந்துள்ளன.

Leave A Reply

Your email address will not be published.