போராட்டத்துக்குத் தடை கோரும் பொலிஸாரின் கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிப்பு.

எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவோர் ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதிக்குள் பிரவேசிக்கத் தடை விதிக்குமாறு கோரி பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை கொழும்பு மேலதிக நீதிவான் கேமிந்த பெரேரா இன்று நிராகரித்துள்ளார்.

நாளையும் (08) நாளைமறுதினமும் (09) கொழும்பு – கோட்டையில் ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதிக்குள் எதிர்ப்பில் ஈடுபடுவோர் பிரவேசிக்கத் தடை விதிக்குமாறு கோரி பொலிஸாரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

கோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி முன்வைத்த இந்தக் கோரிக்கையை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட மேலதிக நீதிவான் அதனை நிராகரித்துள்ளார்.

குற்றச் செயல் இடம்பெற்றால் அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்குப் பொலிஸாருக்கு அதிகாரங்கள் உள்ளதால் குறித்த கோரிக்கையை நிராகரிப்பாக நீதிவான் அறிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.