ரணிலின் வீட்டிற்கு தீ வைத்ததாக மூவர் பொலிஸாரால் கைது (Video)

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட வீட்டிற்கு தீ வைத்ததாக சந்தேகந்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கல்கிஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவரும், காலி பகுதியைச் சேர்ந்த 24 மற்றும் 28 வயதுடைய இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இந்த தீ விபத்து தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் பலர் கைது செய்யப்பட உள்ளனர்.

ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகத்தை ஆக்கிரமித்த ஆர்ப்பாட்ட குழுவினரில் ஒரு பகுதியினர் நேற்று பிற்பகல் பிரதமரின் தனிப்பட்ட இல்லத்திற்கு வந்ததையடுத்து, இரவு நேரத்தில் வீட்டுக்குள் நுழைந்த சிலர் தீ வைத்து எரித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.