கோட்டா – ரணில் இழுத்தடிக்க முடியாது : வசந்த முதலிகே

ஜனாதிபதி உடனடியாக வெளியேறாமல் ஆட்சியில் இருக்க முற்பட்டால் அதற்கு இடமளிக்கப் போவதில்லை என்றும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி கதிரையில் அமர நினைத்தால் அதற்கு அனுமதிக்கப் போவதில்லை எனவும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்தார்.

செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய அவர், இளைஞர்கள் அப்படி ஒன்றுக்காக இரத்தம் வழிந்து , தாக்குதலுக்கு உள்ளாகி போராடவில்லை என்றார்.

எனவே மக்கள் பிரச்னைகளை தீர்க்க ஆட்சியாளர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.