உற்பத்தித்திறன் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்.

உற்பத்தித்திறன் பயிற்சிநெறியில் கலந்து கொண்டவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களின் வினைத்திறனை மேம்படுத்தும் நோக்கில், புதிதாக சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட உத்தியோகத்தர்களுக்கான “உற்பத்தித்திறன்” தொடர்பான இரு நாட்  பயிற்சி வகுப்புக்கள் மாவட்ட செயலக மனிதவள மேம்பாட்டு பிரிவு மண்டபத்தில் 18.08.2020 மற்றும் 20.08.2020 ஆகிய இரு தினங்களில்  இடம்பெற்றுள்ளது.
இப் பயிற்சி நெறியின் இறுதி நாளில் கலந்து கொண்டவர்களுக்கான சான்றிதழ்களை மேலதிக மாவட்ட செயலாளர்,  உதவி மாவட்ட செயலாளர், கணக்காளர், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், நிர்வாக உத்தியோகத்தர் ஆகியோர் வழங்கி வைத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.