கிளிநொச்சி மேற்கு நீர்ப்பாசன பிரிவுக்கான அலுவலகம் திறந்து வைப்பு.

கிளிநொச்சி அக்கராயன்,  வன்னேரி,  பல்லவராயன்கட்டு,  குடமுறுட்டி,  புதுமுறிப்பு ஆகிய குளங்களை உள்ளடக்கிய கிளிநொச்சி மேற்கு நீர்ப்பாசன பொறியியலாளர் பிரிவுக்கான அலுவலகம் வடமாகாண கெளரவ ஆளுநர் அவர்களால் இன்று திறந்து வைக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர்  த.இராஜகோபு தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர், கிளிநொச்சி மாவட்ட அரசாங்கதிபர், வடமாகாண நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் ,வடமாகாண நீர்ப்பாசனப்பணிப்பாளர் ,நீர்ப்பாசன பொறியியலாளர்கள் ,கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர் .

 

Leave A Reply

Your email address will not be published.