தந்தையை மண்வெட்டியால் தாக்கி கொடூரமாகக் கொலைசெய்த மகன்.

மண்வெட்டியால் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்த வயோதிபர் ஒருவர் சாவடைந்துள்ளார்.

மஹஓயா, ஹிகுராலந்த பிரதேசத்தில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 60 வயதுடைய வயோதிபரே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த நபர் மஹஓயா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் மகனே இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளார் என்றும், அவர் மஹஓயா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.