இடைக்கால ஜனாதிபதிக்கு ரணிலே பொருத்தமானவர் அமைச்சர் டக்ளஸ் பகிரங்கமாகத் தெரிவிப்பு.

“இடைக்கால ஜனாதிபதிப் பதவிக்குத் தற்போதைய பதில் ஜனாதிபதியாகப் பதவி வகிக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே பொருத்தமானவராக இருப்பார் என நான் நம்புகின்றேன்.”

இவ்வாறு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இன்று காலை தனியார் வானொலி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.