நாடு திவாலாகியுள்ளது, நிவாரணம் தருவதாக மக்களை ஏமாற்றக் கூடாது – சஜித்

நாடு எதிர்நோக்கும் பொருளாதார வங்குரோத்து நிலையில் மக்களுக்கு திடீரென நிவாரணம் வழங்கப்படும் என பொய் கூற முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பிரஜைகள் போராட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுக்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் திரு.சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (18) காலை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்த வாரத்தில் இந்த நாட்டின் வாரிசு ஜனாதிபதியை நியமிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் போராட்டத்தின் பிரஜைகள் குழுக்கள் எதிர்க்கட்சித் தலைவரிடம் தமது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளனர்.

மேலும் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர், குறிப்பிட்ட வேலைத்திட்டத்தின் இலக்குகளை அடைவதற்கு இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்றார்.

இடைக்கால அரசாங்கங்களுக்கு செயற்பாட்டாளர்கள் திகதிகளை நிர்ணயித்திருந்த போதிலும், குறித்த காலப்பகுதிக்குள் இலக்குகளை அடையாவிட்டால், அந்த அரசாங்கமும் “தோல்வி அடையும்” என்றும் சஜித் பிரேமதாச கூறினார்.

மேலும் கருத்து தெரிவித்த சஜித் பிரேமதாச,

“இந்தக் கொள்கையில் எங்களுக்குப் பெரிய பிரச்சினை இல்லை. மேலும் இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது என்பதை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். நாடு பொருளாதாரத்தில் திவாலாகும் நேரத்தில் மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்று என்னால் பொய் சொல்ல முடியாது. நிவாரணம் கிடைக்கும் என சொல்லவும் முடியாது.மனிதனின் அடிப்படைத் தேவைகள், எரிவாயு, எண்ணெய், உரம், பால் பவுடர், அத்தியாவசிய உணவு.. அது வேறு கதை.உண்மையில் முழு நாடும் திவாலானது.இன்று நாடு நிதிநிலையில் பூஜ்ஜியத்திற்குப் போய்விட்டது. அதுதான் உண்மைக் .எனவே இவற்றை முறையாகச் செய்ய வேண்டும்.நாம் எடுத்த முடிவுதான் காரணம். நீதி கிடைப்பதற்கும் மக்களுக்கு பணபலம் வேண்டும்.

ஆனால், இந்த நாட்டில் மனிதாபிமான பொருளாதார நிர்வாகமும் நடக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக உடன்படுகிறேன். நான் நவதாராளவாத முதலாளிகளை உருவாக்கும் முதலாளித்துவ வர்க்கத்தை வலுப்படுத்தும் கோட்பாட்டில் நம்பிக்கை கொண்டவன் அல்ல. சமநிலையான பொருளாதார நிர்வாகத்தை எதிர்பார்க்கிறோம். இந்த நிலை மிகவும் தீவிரமானது. முதல் கட்டமாக, எரிவாயு, உரம், எண்ணெய் மற்றும் வங்கி அமைப்புகளுக்கு ஒரு டாலர் ஊக்கத்தை கொடுக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம்.

இதையெல்லாம் தெரிந்திருக்கிறோம். உண்மையாக IMF ஆதரவைப் பெறுவது முக்கியம். அது இல்லாமல் போக முடியாது. அவர்கள் நிபந்தனைகளை வழங்குகிறார்கள். உதாரணமாக, சந்தை விலை சூத்திரங்களை கொண்டு வர வேண்டும். அப்போது கண்டிப்பாக மக்களுக்கு சிரமம் ஏற்படும். இது மிகவும் குழப்பமான சூழ்நிலை. ஆனால் இதை சிரமத்துடன் நிர்வகிக்கும் திறன் எங்களிடம் உள்ளது” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.