ரணிலை ஆதரிக்க இ.தொ.கா. முடிவு.

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெறும் ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் வாக்கெடுப்பில் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

நேற்றிரவு நடைபெற்ற இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மத்திய செயற்குழுக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்கச் சிறந்த தீர்வாக ரணில் விக்கிரமசிங்க இருக்கின்றார் என்று கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

நீண்ட கலந்துரையாடலின் பின்னர் கட்சியின் மத்திய செயற்குழுவின் ஆதரவு கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்தே ரணில் விக்கிரமசிங்கவுக்கு இ.தொ.கா. தனது முழுமையான ஆதரவை வழங்கத் தீர்மானித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.