ரணிலின் வெற்றியை கொண்டாடிய நாமல்

ரணிலின் வெற்றிக்காக அதிகாலை 3 மணி வரை நாமலின் வீட்டில் உட்சாக பானத்தோடு பார்ட்டி டைம்! டலஸை ஆதரிப்பதாக சொன்ன தொலவத்தவும் கலந்து கொண்டார்!

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அன்றைய தினம் இரவு நாமல் ராஜபக்சவின் வீட்டில் மாபெரும் இராப்போசன விருந்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்காக பொஹொட்டுவ பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் நாமல் ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

அதன்படி 137 எம்.பி.க்கள் இதில் கலந்து கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

அதிகாலை 3 மணி வரை நடைபெற்ற இந்த விருந்தில் சுவையான உணவுகள் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

டலஸ் அழகப்பெருமவை ஆதரிப்பதாக பகிரங்கமாக தெரிவித்த பிரேம்நாத் தொலவத்த அவர்களும் கலந்துகொண்டதாக அறியமுடிகிறது.

Leave A Reply

Your email address will not be published.