கொக்கட்டிச்சோலையில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள மகிழடித்தீவு பிரதேசத்தில் காளிகோயில் ஆலைமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மகிழடித்தீவு, பாடசாலை வீதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான குமாரசாமி திலகேஸ்வரன் (வயது 37) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று கொக்கட்டிச்சோலைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் குடும்பப் பிரச்சினை காரணமாக நேற்றிரவு தனது வீட்டிலுள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்ய முயன்றபோது காப்பாற்றப்பட்டிருந்தார் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இவர் இன்று காளிகோயில் ஆலைமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம், பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கொக்கட்டிச்சோலைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.