அரச பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிடும் அரசுடன் இணைவதில்லை : ஐக்கிய மக்கள் சக்தி.

மக்கள் பிரச்சினைகளுக்கு உண்மையான தீர்வுகளை வழங்காமல் அரச பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிடும் அரசாங்கத்துடன் இணைந்து கொள்வதில்லை என்றும், அதில் அமைச்சுப் பதவிகளைப் பெறுவதில்லை என்றும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் ஏகமனதாக தீர்மானித்துள்ளனர்.

இன்று நடைபெற்ற கட்சியின் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், மக்களின் எரியும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்காக பாராளுமன்ற குழு அமைப்பு ஏற்படுத்தப்பட்டால் அதற்கு ஆதரவளிக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி குழு எம்.பி.க்கள் ஏகமனதாக தீர்மானித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.