பண்டாரநாயக்க சிலைக்கு அருகில் அமர்ந்திருந்த 4 பேர் கைது!

நீதிமன்ற உத்தரவை மீறி காலிமுகத்திடலில் உள்ள பண்டாரநாயக்கவின் சிலைக்கு அருகில் அமர்ந்திருந்த நால்வரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பண்டாரநாயக்க சிலை அமைந்துள்ள காலி முகத்திடலில் இருந்து 50 மீற்றர் பகுதிக்குள் எந்தவொரு தரப்பினரும் பிரவேசிக்கக் கூடாது என கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்திருந்தது.

அதனை மீறி சிலைக்கு அருகில் தங்கியிருந்த நான்கு பேர் கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை, காலிமுகத்திடலில் பண்டாரநாயக்க சிலை அமைந்துள்ள இடத்திலிருந்து 50 மீற்றர் தூரத்தில் உள்ள பகுதி பிரவேசிக்கக் தடையான பிரதேசம் என குறித்த பகுதியை பொலிஸார் குறித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.