கோட்டாவுக்கு சிங்கப்பூர் கொடுத்த வீசா காலம் நீட்டிப்பு!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு சிங்கப்பூரில் தங்கியிருப்பதற்கான கால அவகாசத்தை சிங்கப்பூர் அரசாங்கம் நீட்டித்துள்ளது.

முன்னதாக, அவர் 15 நாட்களுக்குள் சிங்கப்பூரை விட்டு வெளியேற வேண்டும் என்று அரசு அவருக்குத் தெரிவித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

ஆனால் அவருக்கு வழங்கப்பட்ட குறுகிய கால விசாவை நீடிக்க அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.