இரத்மலானையில் 30 வயதுடைய இளைஞர் சுட்டுக்கொலை!

இன்று (28) அதிகாலை இரத்மலானை, சில்வா மாவத்தை பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் புகுந்த இருவர் நடத்திய துப்பாக்ச்சூட்டில் 30 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடந்த போது அவரது மனைவியும் உடனிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

டி.56 துப்பாக்கியால் துப்பாக்கிச்சூடு நடத்தியமை தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டை நடத்திய சந்தேக நபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.