வெல்லாவெளியில் 5 மோட்டார் சைக்கிள்களை துவம்சம் செய்த யானைகள்!

பெற்றோல் பெறுவதற்காக வரிசையில் வைக்கப்பட்டிருந்த ஐந்து மோட்டார் சைக்கிள்களை வழியால் வந்த யானைகள் அடித்து, நொறுக்கித் துவம்சம் செய்துள்ளன.

இந்தச் சம்பவம் இன்று அதிகாலை வெல்லாவெளிப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

வெல்லாவெளி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடந்த மூன்று நாட்களாக 500 இற்கும் மேற்பட்ட மோட்டர் சைக்கிள்கள், ஓட்டோக்கள் என வாகனங்கள் பெற்றோலுக்காக நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.

இன்று அதிகாலை 4 மணியளவில் பிரதான வீதியைக் குறுக்கறுத்த யானைகள் அங்கு அடுக்கிவைக்கப்பட்டிருந்த 5 மோட்டார் சைக்கிள்களை அடித்து நொறுக்கி மிதித்துச் சென்றன.

அந்தவேளை அங்கு நின்ற வாகன உரிமையாளர்கள் யானைகளைக் கண்டு ஓடினர்.

காலையில் ஏனையவர்கள் வந்து பார்த்தபோது 5 மோட்டார் சைக்கிள்கள் இவ்வாறு சேதமாக்கப்பட்டுக் காணப்பட்டன.

வெல்லாவெளி பொலிஸ் பிரிவு உட்பட்ட காக்காச்சிவட்டை எனும் பின்தங்கிய கிராம விவசாயிகளின் மோட்டார் சைக்கிள்களே அவை என்று அங்கு வரிசையில் நின்ற ஆசிரிய ஆலோசகர் ஒருவர் தெரிவித்தார்.

மழைக்கு மத்தியிலே இந்த யானைகளின் அட்டகாசமும் அதிகரித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.