எப்படியும் வருவோம்! வெளி தலையீடு தேவையில்லை! இந்தியாவுக்கு பதிலடி கொடுத்த சீனா!

தனது சட்டபூர்வமான கடல்சார் நடவடிக்கைகளில் வெளி தரப்பினர் தலையிட மாட்டார்கள் என எதிர்பார்ப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரவிருக்கும் சீனக் கப்பல் தொடர்பில் இந்தியாவின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் சீன வெளிவிவகார அமைச்சு இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி, சீனாவின் கடல்சார் ஆய்வு நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட தரப்பினர் துல்லியமாக கண்காணித்து அறிக்கை தருவார்கள் என சீனா நம்புகிறது. மேலும், கடலின் சுதந்திரத்தை சீனா எப்போதும் சட்டப்பூர்வமாக பயன்படுத்தி வருவதாகவும் சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சர்ச்சைக்குரிய சீனக் கப்பல் எதிர்வரும் 11ஆம் திகதி அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கப்பலின் வருகையை உன்னிப்பாக கவனித்து வருவதாக இந்தியா தெரிவித்திருந்தது.

சர்ச்சைக்குரிய கப்பல் சீனாவுக்கு சொந்தமான யுவான் வாங் 5 ஆகும். கடந்த 13ஆம் திகதி சீனாவின் ஜியானிங் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு தைவானைக் கடந்து தற்போது கிழக்கு சீனக் கடலில் பயணித்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.