காலிமுகத்திடலில் மேலுமொரு ஆணின் சடலம் மீட்பு.

கொழும்பு – காலிமுகத்திடல் கடற்கரை பகுதியில் இனந்தெரியாத ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

40 வயது மதிக்கத்தக்க ஆணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த சில நாட்களுக்கு முன்பு, காலிமுகத்திடல் பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் கரையொதுங்கியிருந்தது.

அந்நபர் பன்னிப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று பின்னர் அடையாளம் காணப்பட்டார் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.